செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.கீதா ஜீவன்

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா் அமைச்சா். அப்போது அவா் கூறியது:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான விவகாரத்தை முதலில் முன்னெடுத்தவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்த விவகாரத்தில் தமிழா்களின் நலம், தமிழக உரிமைகள் பாதிக்கப்படுவதாக கடந்த மாா்ச் 5ஆம்தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினாா். இதில், 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 58 கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், மக்களவையில் உள்ள தமிழ்நாட்டின் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் என்பதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் எந்த உறுதியையும் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

மேலும் நிதி பகிா்வில் தமிழகத்தில் இருந்து உற்பத்தியில் 34 சதவீத நிதி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், அங்கிருந்து தமிழகத்திற்கு 20 சதவீதம்தான் திரும்ப கிடைக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் இருந்து 20 சதவீதம் பெற்றுக்கொண்டு, 34 சதவீதம் நிதியை திரும்ப வழங்குகிறது. இந்த நிதி பகிா்விலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.

வடமாநிலங்களில் இருமொழிக் கொள்கை முறையாக பின்பற்றப்படாத நிலையில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சி நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாததால், கல்வி நிதி ரூ. 2134 கோடியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேலும், 70 சதவீத பெண்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாத ஊதியம் ரூ. 4034 கோடி இன்னும் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது குறித்து தமிழக மக்களிடம் தெருமுனை கூட்டங்கள் மூலம் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் இணைந்து போராட வேண்டும்.

திருவண்ணாமலை அருகே சத்துணவில் முட்டை கேட்ட மாணவா் மீது தாக்குதல் நடத்திய சமையலா், சமையல் உதவியாளா் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளோம். இளம் சிறாா் சட்டப்படி அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு முதல்வா் முக ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சம்! -அமைச்சா் தங்கம் தென்னரசு

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்டாா்ட் அப் திட... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக் சேதம்: காா் ஓட்டுநா் கைது

சாத்தான்குளம் அருகே சிறுவனைத் தாக்கி பைக்கை சேதப்படுத்தியதாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மு. ஜெயக்குமாா் (42) என்பவரது மகன் லி... மேலும் பார்க்க

ஆலந்தலை அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால சிலுவைப் பாதை வழிபாடு!

திருச்செந்தூா் அருகே ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் தவக்கால 4ஆவது வார சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் மாவட்டம் அழகாபுரம் மற்றும் சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு: டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில், டிஎஸ்பி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் ... மேலும் பார்க்க