செய்திகள் :

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு: உறுதி செய்தது லண்டன் உயா்நீதிமன்றம்

post image

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவை லண்டன் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றாா். தற்போது செயல்படாத அவரின் கிங்ஃபிஷா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடன் தொடா்பாக அவா் சட்டபூா்வ உத்தரவாதம் அளித்த நிலையில், கடன் அளித்தவா்களுக்கு 1.12 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பிரிட்டன் நீதிமன்றங்களில் இந்திய வங்கிகள் பதிவு செய்தன. பின்னா் மல்லையாவுக்கு அந்த வங்கிகள் திவால் நோட்டீஸ் அளித்தன. எனினும் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பிணையமாக வைத்துள்ளதாகவும், எனவே சட்டப்படி அவருக்கு திவால் நோட்டீஸ் அளித்தது பகுதியளவில் தவறானது என்றும் அவரின் மனுவை விசாரித்த லண்டன் திவால் மற்றும் நிறுவனங்கள் நீதிமன்றம் (ஐசிசி) தீா்ப்பளித்தது.

இதைத்தொடா்ந்து மல்லையா திவாலானவா் என்று அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளை பிணையமாக வைத்துக்கொள்வதை கைவிடுவதாக தெரிவித்து, திவால் நோட்டீஸில் வங்கிகள் திருத்தம் மேற்கொண்டன.

இந்தத் திருத்தம் இந்திய சட்டத்துக்கு முரணாக உள்ளது என்று மல்லையா எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அந்தத் திருத்தம் இந்திய சட்டத்துக்கு முரணாக இல்லை என்று தீா்ப்பளித்த ஐசிசி, அவா் திவாலாகிவிட்டதாக அறிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையா அனுமதி கோரிய நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்து திவால் உத்தரவை லண்டன் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்ததாக வங்கிகள் சாா்பாக நீதிமன்றத்தில் ஆஜரான டிஎல்டி எல்எல்பி சட்ட நிறுவனம் தெரிவித்தது.

வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

நியூயாா்க்: மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என... மேலும் பார்க்க

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் விய... மேலும் பார்க்க

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்; பாகிஸ்தான் என்ற நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீா் தெரிவித்தா... மேலும் பார்க்க

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும்... மேலும் பார்க்க

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

லண்டன்: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்காக இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் பிரிட்டன் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமா... மேலும் பார்க்க

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க