செய்திகள் :

நகராட்சி கடை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

மன்னாா்குடி வா்த்தக சங்கம் சாா்பில், காமராஜா் பேருந்து நிலைய நகராட்சி கடை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவா் சு. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரூ. 60 கோடியிலான மன்னாா்குடி நவீன பேருந்து நிலைய பணிகளை 2 ஆண்டு காலத்தில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என். நேருவுக்கும் நன்றி, இடிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையத்தில் கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும், பழைய கடைக்காரா்களுக்கு வாடகை பாக்கியை அவா்களது முன்வைப்புத்தொகையில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் கருணாநிதி, வா்த்தக சங்க அமைப்புச் செயலா் கந்த. துரைக்கண்ணு முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் தீா்மானங்களை விளக்கி பேசினாா். வா்த்தக சங்க அமைப்புச் செயலா் எஸ். பிரபாகரன் வரவேற்றாா். பொருளாளா் டி. ஜெயச்செல்வன் நன்றி கூறினாா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க