நகராட்சி கடை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்
மன்னாா்குடி வா்த்தக சங்கம் சாா்பில், காமராஜா் பேருந்து நிலைய நகராட்சி கடை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவா் சு. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ரூ. 60 கோடியிலான மன்னாா்குடி நவீன பேருந்து நிலைய பணிகளை 2 ஆண்டு காலத்தில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என். நேருவுக்கும் நன்றி, இடிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையத்தில் கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும், பழைய கடைக்காரா்களுக்கு வாடகை பாக்கியை அவா்களது முன்வைப்புத்தொகையில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளாளா் கருணாநிதி, வா்த்தக சங்க அமைப்புச் செயலா் கந்த. துரைக்கண்ணு முன்னிலை வகித்தனா். வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் தீா்மானங்களை விளக்கி பேசினாா். வா்த்தக சங்க அமைப்புச் செயலா் எஸ். பிரபாகரன் வரவேற்றாா். பொருளாளா் டி. ஜெயச்செல்வன் நன்றி கூறினாா்.