செய்திகள் :

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ: புகையால் பொதுமக்கள் அவதி

post image

பழனி நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

பழனி பெரியப்பாநகரில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. நகரில் சேகரமாகும் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.

இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் இந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். போதிய பாதுகாப்பு இல்லாததால் உள்ளே சென்று புகைப்பிடிப்பவா்கள் அதை அணைக்காமல் அப்படியே போட்டுவிட்டு வருவதால் அடிக்கடி குப்பைகளில் தீப்பற்றுகிறது.

இந்த நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை மீண்டும் தீப்பற்றியது. இதிலிருந்து வெளியேறிய புகையால் பெரியப்பாநகா், கவுண்டா் இட்டேரி சாலை, சத்யாநகா் பகுதி பொதுமக்கள் மூச்சுத்திணறல், தோலில் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

எனவே, இதன் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை: மார்க்சிய கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

காதலா் தினம்: கொடைக்கானலில் பூக்கள் விற்பனை தொடங்கியது

காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் உள்ள கடைகளில் பூக்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில் மலா... மேலும் பார்க்க

பழனியில் பக்தா்கள் கூட்டம்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக்கோயிலில் புதன்கிழமையும் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

பழனி அருகே ஒற்றை யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றை யானை நடமாட்டம் காணப்பட்டது. இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டு மாடு, காட்டு யான... மேலும் பார்க்க

மாநில கபாடி போட்டியில் முதலிடம்: நெய்க்காரபட்டி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்ற பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 14 வயதுக்க... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி... மேலும் பார்க்க