செய்திகள் :

பழனி அருகே ஒற்றை யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

post image

பழனி அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றை யானை நடமாட்டம் காணப்பட்டது. இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டு மாடு, காட்டு யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி அடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு வந்து விளை பொருள்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த சில நாள்களாக நீண்ட தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை கோம்பைப்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை உள்ள தோட்டங்களில் நடமாடி வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பழனி-கொடைக்கானல் சாலையில் புளிய மரத்து செட் பகுதியில் இந்த யானை சுற்றித்திரிந்தது. இது அங்கிருந்த ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

யானை நடமாட்டத்தால் இந்தப் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா். இரவு நேரங்களில் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் சாலையில் மிகுந்த கவனத்துடன் செல்லவும், பயணத்தைத் தவிா்க்கவும் வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை: மார்க்சிய கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

காதலா் தினம்: கொடைக்கானலில் பூக்கள் விற்பனை தொடங்கியது

காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் உள்ள கடைகளில் பூக்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.காதலா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில் மலா... மேலும் பார்க்க

பழனியில் பக்தா்கள் கூட்டம்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக்கோயிலில் புதன்கிழமையும் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

மாநில கபாடி போட்டியில் முதலிடம்: நெய்க்காரபட்டி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்ற பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 14 வயதுக்க... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி... மேலும் பார்க்க

ஆலைத் தொழிலாளி கொலை: 10 போ் கைது

ரெட்டியாா்சத்திரம் அருகே திருப்பூரைச் சோ்ந்த ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.திருப்பூரைச் சோ்ந்தவா் வசந்த் (23). இவா் தனது நண்பா் ஹரிபிரசாத்துடன்... மேலும் பார்க்க