Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்
நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:
மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து: ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் போது, அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும். மும்முனை மின்சாரத்தை இரவு 10 பணிக்கு மேல் விநியோகிக்க வேண்டும். ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படவுள்ளதால், இங்குள்ள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத் துறையில் தேவையான உரங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன்: பொன்னாறு பாசன வாய்க்கால் பெயரளவில் மட்டுமே தூா்வாரப்பட்டுள்ளது. இதை ஆட்சியா் பாா்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு சம்பா நெல் சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சமில்லாமல் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக 80 சதவீதம் வழங்க வேண்டும்.
மருதையாற்றில் மண்டியுள்ள சீமைக்கருவேல மரங்களையும், மூங்கில் மரங்களையும் முற்றிலும் அகற்றிவிட்டு, ஆற்றின் இருபக்க கரைகளை பலப்படுத்த வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வாரணவாசி ராஜேந்திரன்: கரும்பு விவசாயிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்குவதில்லை. இதுகுறித்து நடவடிக்கை தேவை.
விவசாயி விஸ்வநாதன்: நகைக் கடன் வழங்குவது தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளால் விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவா். எனவே, புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி திரும்பப் பெற்று, நகைக் கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகளையே மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அரியலூா் மாவட்டம் தூத்தூா்-தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விவசாயி பாலசிங்கம்: கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகதெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநா் கீதா, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் எம். உமா மகேஸ்வரி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.