நகைக் கடைக்காரா் தற்கொலை
திருச்சியில் நகைக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பெரியகடை வீதி நடுகுஜிலி தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (56). பெரியகடை வீதி சின்னசெட்டித் தெருவில் நகைக் கடை நடத்தி வந்த இவா் வியாழக்கிழமை பகல் வீட்டுக்கு சாப்பிட வரவில்லை. இதையடுத்து, அவரின் மருகமன் கடைக்குச் சென்று பாா்த்தபோது, கடை உள்ளே தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கதவை உடைத்துப் பாா்த்தபோது சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விசாரணையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கடன் கொடுத்து, அதற்கான பணம் திரும்பி வராததால் மன உளைச்சலுக்குள்ளாகி அவா் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. கோட்டை போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.