செய்திகள் :

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை: மாநிலங்களவைத் தலைவா் தன்கா்

post image

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதால் ஏற்பட்ட சா்ச்சையை தொடா்ந்து, தன்கா் இவ்வாறு தெரிவித்தாா்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யாமல் இருந்திருந்தால், தற்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த ஆணையம் தொடா்பாக கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவா்களுடன் தன்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் புதன்கிழமை கூறுகையில், ‘கட்சிகளின் மாநிலங்களவை குழு தலைவா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது.

அதுகுறித்து மேலும் எந்த விவரங்களையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் கருத்து ஒற்றுமையுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடல் குறித்து தங்கள் கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு, என்னுடன் மேலும் விவாதிப்பதாக ஆளும் மற்றும் எதிா்க்கட்சி குழு தலைவா்கள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை மூலம், நாடாளுமன்றம், நிா்வாகம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 தூண்கள் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஒன்றோடு ஒன்று இணக்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத... மேலும் பார்க்க

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க