செய்திகள் :

``நாடுகளுக்கு மத்தியிலான போரால்தான் அமெரிக்கா வளர்கிறது..!" - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காட்டம்

post image

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா லாபம் ஈட்டுவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில,``கடந்த 100 ஆண்டுகளில், அமெரிக்கா 260 போர்களை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் சீனா மூன்றில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிமுக்கிய வருவாய். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து மோதல்களை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகள் ஒரு காலத்தில் வளமானவை. ஆனால் இப்போது போர்களால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன.

அமெரிக்காவின் தலையீடு

இந்த நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுதான் அவற்றின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம். அதே நேரம் அமெரிக்கா போரில் இரு தரப்பிலிருந்தும் விளையாடும். அதன் மூலம் இராணுவ-தொழில்துறை லாபத்தை மேம்படுத்திகொள்கிறது. அமெரிக்காவின் வளர்ச்சியே நாடுகளுக்கு மத்தியில் குழப்பத்தை உருவாக்கி, அதன் மூலம் பொருளாதாரத்தை கேள்விக்குறியக்கி, போரை உருவாக்கி லாபம் சம்பாதிப்பதில் இருக்கிறது." என்றார்.

அமெரிக்கா
அமெரிக்கா

இதற்கு முன்பு, பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், ``அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் நிர்பந்தத்தால் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களை ஆதரித்து வளர்த்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கும் பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலையைச் செய்து வந்தோம். ஆனால், அது தவறு, அதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.

பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imperfect Show 30.5.2025

* நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை?* MLA பதவியை ராஜினாமா செய்வேன் - அருள் * மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி இன்றும் ஆலோசனை?* மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும் விஜய்... ஹைலைட்ஸ்! * பள்ளிபாளையம் பால... மேலும் பார்க்க

Ramadoss-ஐ மிரட்டும் Anbumani மூவ், நீதி பயணம் போகும் Ramadoss? | Elangovan Explains

ராமதாஸுக்கு எதிராக அன்புமணி போட்டிருக்கும் மூன்று நாள் மீட்டிங். அதில் குவிந்த மாவட்ட செயலாளர்கள். இது ராமதாஸை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுப்பயணம், பொதுக்குழு என வேகம் காட்டத் துட... மேலும் பார்க்க

United Nations: நிதி நெருக்கடி... `கிட்டத்தட்ட 7,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா ஐக்கிய நாடுகள் சபை?'

நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம். ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில்... மேலும் பார்க்க

பாமக: "என் அம்மா மேல் துரும்பைக் கூடப் படவிடமாட்டேன்; ஆனால் இப்போது..." - அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே, நேரிடையாகவும், மறைமுகமாகவும் வார்த்தை மோதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.இத்தகைய சூழலில், சோழிங்... மேலும் பார்க்க

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க