செய்திகள் :

'நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்'- ஓய்வு குறித்து ரொனால்டோ

post image

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார்.

ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன.

2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது.

அதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் அந்த விலைக்கு வாங்கப்படாததால் உலகின் விலையுயர்ந்த கால்பந்து வீரராக ரொனால்டோ பார்க்கப்பட்டார்.

பின் பல வருடங்கள் கழித்து 2021-ம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலேயே இணைந்தார்.

ஆனால் இணைந்த ஓராண்டிலேயே கிளப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ.

அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார்.

கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அல் நஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

அதற்கு பதிலளித்த அவர், " என் திட்டம் தெளிவாக இருக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்.

எனது கிளப்புக்கும், அணிக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். நான் ஓய்வு பெறும் போது, முழு திருப்தியுடன் இருப்பேன் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்" என்று கூறியிருக்கிறார்.

Ajith Kumar Racing: 24H சீசனில் 3வது இடம் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

நடிகரும் கார் பந்தைய வீரருமான அஜித் குமாரின் Ajith Kumar Racing அணி, Creventic 24H European Endurance Championship Series 2025-ல் சீசன் முடிவில் ஒட்டுமொத்தமாக 3வது இடம் பிடித்துள்ளனர்.இந்த சீசனில் Tea... மேலும் பார்க்க

Usain Bolt: "இந்திய உணவுகளில் இதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது" - உசைன் போல்ட்

இந்தியாவிற்கு வந்திருக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் 'NDTV' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், "14 வருடத்திற்கு முன்பு நான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். அப்... மேலும் பார்க்க

டெல்லி உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: மைதானத்திற்குள் நுழைந்து கென்ய அதிகாரியைக் கடித்த தெருநாய்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இதற்காக 2,200-க்கும் மேற்பட்ட சர்வதேச பாரா தடகள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை தந்திர... மேலும் பார்க்க

Usain Bolt: "கனவு நிறைவேறிவிட்டது" - உசைன் போல்ட்டைச் சந்தித்த இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் சர்வதேச தடகள வீரர் உசைன் போல்ட்டை நேரில் சந்திருக்கிறார். இதுதொடர்பாக ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ச... மேலும் பார்க்க

Ind vs Pak: மீண்டும் நேருக்கு நேர் மோதும் இந்தியா, பாகிஸ்தான்; SKY & Co கைகுலுக்குமா, அவமதிக்குமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியிருக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. சூர்யகுமார் ... மேலும் பார்க்க

Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேற்றம்; நடந்தது என்ன?

உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இற... மேலும் பார்க்க