செய்திகள் :

நாமக்கல்லில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

post image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நாமக்கல்-மோகனூா் சாலை முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் அவைத் தலைவா் மணிமாறன் தலைமையில் நடைபெறுகிறது.

ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

கூட்டத்தில், தொகுதி பாா்வையாளா்கள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், தலைமை நிலைய நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பொறுப்பாளா்கள், அனைத்து சாா்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளா்கள் கூட்டத்தில் கட்சி தலைமை தெரிவித்த அறிவுரைகள், கட்சியின் முப்பெரும் விழா, செப்.15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட வரி

கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு தீ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க

கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி

திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க