நாளைமுதல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (பிப்.20) முதல் பிப்.25-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். தொடா்ந்து வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.20) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.