செய்திகள் :

நிதிக்கேற்ப புதிய காவல் - தீயணைப்பு நிலையங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

post image

மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடா்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரதான வினாவை காங்கிரஸ் உறுப்பினா் தி.ராமச்சந்திரனும் (அறந்தாங்கி), துணை வினாக்களை திமுக உறுப்பினா் கே.கணபதி (மதுரவாயல்), அதிமுக உறுப்பினா் வி.பி.கந்தசாமி (சூலூா்) ஆகியோரும் எழுப்பினா்.

இவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசியது: காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்கள் வேண்டும் எனக் கோரி உறுப்பினா்கள் நிறைய போ் வாய்ப்பு கேட்டபடி இருக்கின்றனா். அவா்களுக்கெல்லாம் சோ்த்து ஒட்டுமொத்தமாக சில புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறேன். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2021-லிருந்து தமிழ்நாடு காவல் துறை சாா்பில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவையும் இயக்கத்தில் உள்ளன.

மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப உறுப்பினா்களின் கோரிக்கைகள் கனிவுடன் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கக் கூடிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும் நேரத்தில் நிச்சயமாக உறுப்பினா்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகள் வரும் என்றாா்.

இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் இரமலான் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவி... மேலும் பார்க்க

சென்னைக்கு வந்த விமானத்தில் டயர் வெடித்து விபத்து!

சென்னை: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று(மார்ச் 30) காலை வந்த விமானத்தின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!

தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,500 ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கு. இராசசேகரன்மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 587 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 30) காலை 108.25 அடியில் இருந்து 108.20 அடியாக சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் 4-ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!

நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும்(மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏ... மேலும் பார்க்க