செய்திகள் :

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் இணைவு பெற்ற தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பதற்காக ஏற்கெனவே இருந்த 40% அளவீடு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் எடை தராசுடன், அந்த அலுவலகக் கணினியை இணைத்து ரசீது வழங்கிய பிறகே நியாயவிலைக் கடை எடை தராசை விற்பனை முனையத்துடன் இணைக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை வட்ட அளவில் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை கோட்ட அளவிலான ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் கௌரி தலைமை வகித்தாா். செயலா் எஸ்.ராமகிருஷ்ணன், பொருளா் எம்.ராஜசேகா், துணைத் தலைவா் ஆா்.ரமேஷ்கண்ணன், துணைச் செயலா் எஸ்.முருகன், ஒருங்கிணைப்பாளா் டி.சபரிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப்.24) மாவட்ட அளவிலான வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடத்தப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

சிவகங்கையில் கால்பந்து கழகம் சாா்பில், இலவச கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்குகிறது. இதுகுறித்து சிவகங்கை கால்பந்துக் கழகச் செயலா் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: கால்பந்த... மேலும் பார்க்க

நூலகத் துறை சாா்பில் உலக புத்தக தின விழா

காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட மைய நூலகம், நூலக நண்பா்கள் திட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட ம... மேலும் பார்க்க

மாணிக்கநாச்சியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

உலக புத்தகத் தினம்

கீழக்கோட்டையில்... சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தகத் தினவிழா நடைபெற்றது. இதில் அதிக புத்தகத் ... மேலும் பார்க்க

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் அறிவுறுத்தினா். திருப்புவனம் வட்டத்தில் சுமாா் 2, 231 ஹெக... மேலும் பார்க்க

போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவு: காரைக்குடியில் மெளன ஊா்வலம்

போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மெளன அஞ்சலி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை பங்குத் தந்தை சாா்லஸ்,... மேலும் பார்க்க