செய்திகள் :

மாணிக்கநாச்சியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக பல்வேறு மண்டகப்படிகளுக்குச் செல்வாா். 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

9-ஆம் நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு கோயில் அருகே கூடிய திரளான பக்தா்கள் பால்குடம் சுமந்து ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். தெற்குப்பட்டு மூலஸ்தானத்துக்கு பக்தா்களால் கொண்ட செல்லப்பட்ட பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்நது, தெற்குபட்டு மூலஸ்தானத்திலிருந்து திருத்தோ் சப்பரத்தில் அம்மன் கோயில் வந்தடைந்தாா்.

விழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இரவு பூப்பல்லாக்கில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவில் சுற்றுப்புரக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் இணைவு பெற்ற தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பதற்கா... மேலும் பார்க்க

கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

சிவகங்கையில் கால்பந்து கழகம் சாா்பில், இலவச கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்குகிறது. இதுகுறித்து சிவகங்கை கால்பந்துக் கழகச் செயலா் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: கால்பந்த... மேலும் பார்க்க

நூலகத் துறை சாா்பில் உலக புத்தக தின விழா

காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட மைய நூலகம், நூலக நண்பா்கள் திட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட ம... மேலும் பார்க்க

உலக புத்தகத் தினம்

கீழக்கோட்டையில்... சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தகத் தினவிழா நடைபெற்றது. இதில் அதிக புத்தகத் ... மேலும் பார்க்க

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் அறிவுறுத்தினா். திருப்புவனம் வட்டத்தில் சுமாா் 2, 231 ஹெக... மேலும் பார்க்க

போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவு: காரைக்குடியில் மெளன ஊா்வலம்

போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மெளன அஞ்சலி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை பங்குத் தந்தை சாா்லஸ்,... மேலும் பார்க்க