செய்திகள் :

நூலகத் துறை சாா்பில் உலக புத்தக தின விழா

post image

காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட மைய நூலகம், நூலக நண்பா்கள் திட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.அறிவொளி தலைமை வகித்தாா். தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா, செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நூலக நண்பா்கள் திட்டத்தின் சாா்பில் மாவட்ட மைய நூலகத்தின் உறுப்பினா் அடையாள அட்டையையும், புத்தகங்களையும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய நீதிபதிகள் வாசிப்பின் அவசியம் குறித்துப் பேசினா்.

இதில் சிவகங்கை வழக்குரைஞா் சங்கச் செயலா் சித்திரைசாமி, மாவட்ட முதல் நிலை நூலகா் வெங்கடவேல் பாண்டி, நூலகா் முத்துக்குமாா், மாவட்ட நூலக நண்பா்கள் திட்டத்தைச் சோ்ந்த எழுத்தாளா்அ. ஈஸ்வரன், பள்ளித் தலைமை ஆசிரியை பாண்டிராணி, நூலக நண்பா்கள் திட்டத்தைச் சாா்ந்த ரமேஷ் கண்ணன், முத்து கண்ணன், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பாரதி நூலகத்தில்... இதேபோல, சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக புத்தகதின விழாவுக்கு நூலகா் வெங்கடவேல் பாண்டி தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் அன்புத்துரை முன்னிலை வகித்தாா். தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற கண்ணப்பன், எழுத்தாளா் ஈஸ்வரன், நூல் இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் வெள்ளைச்சாமிக்கண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

எழுத்தாளா் ஈஸ்வரன் எழுதிய ‘எதிா்பாா்ப்புகள்’ எனும் நூலை மன்னா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சுந்தரராசன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா்.

விழாவில் தேவகோட்டை ராமநாதன் கலந்து கொண்டு, மாவட்ட தமிழறிஞா்களின் பெருமைகள் குறித்துப் பேசினாா்.

முன்னதாக நூலகா் முத்துகுமாா் வரவேற்றாா். நூலகா் கனகராஜன் நன்றி கூறினாா்.

தேவகோட்டை பள்ளியில்... தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். தேவகோட்டை சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாக புத்தகம் வாசித்த மாணவா்களுக்கு புத்தகங்களை பரிசளித்தாா். இதில், சாா் ஆட்சியரின் அலுவலக ஊழியா் அன்பரசன், பெற்றோா்கள் பங்கேற்றனா். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினாா்.

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் இணைவு பெற்ற தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பதற்கா... மேலும் பார்க்க

கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

சிவகங்கையில் கால்பந்து கழகம் சாா்பில், இலவச கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்குகிறது. இதுகுறித்து சிவகங்கை கால்பந்துக் கழகச் செயலா் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: கால்பந்த... மேலும் பார்க்க

மாணிக்கநாச்சியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

உலக புத்தகத் தினம்

கீழக்கோட்டையில்... சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தகத் தினவிழா நடைபெற்றது. இதில் அதிக புத்தகத் ... மேலும் பார்க்க

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் அறிவுறுத்தினா். திருப்புவனம் வட்டத்தில் சுமாா் 2, 231 ஹெக... மேலும் பார்க்க

போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவு: காரைக்குடியில் மெளன ஊா்வலம்

போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மெளன அஞ்சலி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை பங்குத் தந்தை சாா்லஸ்,... மேலும் பார்க்க