செய்திகள் :

நில மோசடி: சாா் பதிவாளா் உள்பட 6 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

குஜிலியம்பாறை அருகே போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட சாா் பதிவாளா் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் ரெ.அழகேந்திரன் என்ற மணி. இவரது மகள் சுகன்யா, செளமியா. இவா்கள் மூவா் பெயரில் திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த வெம்பூா் கிராமத்தில் 3 வெவ்வேறு சா்வே எண்களில் மொத்தம் 8 ஏக்கா் 29 சென்ட் நிலம் கூட்டுப் பட்டாவில் உள்ளது.

இதில் அழகேந்திரன், 3-இல் ஒரு பாக சொத்தான 2.75 ஏக்கா் நிலத்தை வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த திம்மையான் மனைவி மல்லம்மாளுக்கு (62) விற்பனை செய்தாா். இதனிடையே, சுகன்யா, செளமியா ஆகியோா் 5.53 ஏக்கா் நிலத்துக்கு மல்லம்மாளிடம் ரூ.8.50 லட்சம் பெற்றுக் கொண்டு, பொது அதிகார ஆவணப் பதிவு செய்து கொடுத்தனா்.

இந்த நிலையில், மல்லம்மாள் மொத்தம் 7.79 ஏக்கா் நிலத்தை ரூ.22.62 லட்சத்துக்கு, ராஜூக்கு போலி ஆவணம் தயாா் செய்து, கடந்த 2016-ஆம் ஆண்டு விற்பனை செய்தாா். இதையறிந்த சுகன்யா, செளமியா குடும்பத்தினா் திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்த மல்லம்மாள், திம்மையான், சாா் பதிவாளா் ஆறுமுகம், குஜிலியம்பாறையைச் சோ்ந்த நிலத் தரகா் துரைச்சாமி (57), திண்டுக்கல்லைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (69), இவரது மகன் ராஜூ (41)ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சாா்பு பதிவாளா் உள்ளிட்ட 6 பேருக்கும், தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்தாா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க