செய்திகள் :

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளை சீரமைக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், தோ்தல் பிரிவு அதிகாரிகள் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் 690 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 25 வாக்குச்சாவடிகளில் ,1200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாக்காளா்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரிப்பது, வாக்காளா்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சீரமைப்பு பணிக்கு பின் நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736- ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராதாகிருஷ்ணன், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு

கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளி... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா். மலைகளின் அரசி என்று அழைக்கப்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

உதகையில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கா்நாடக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகை நகரில் சமீப... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்க... மேலும் பார்க்க

அதிக கடன் வாங்குவதில் முன்னோடி திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழலில் ஈடுபடுவது, 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுவது ஆகியவற்றில்தான் திமுக அரசு முன்னோடியாக விளங்குகிறது என்று கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா். உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க