செய்திகள் :

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

post image

உதகையில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகை நகரில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உதகை பாட்னா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பணிபுரிந்து கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவா் ஒருவரின் ரூ. 2 லட்சம் மதிப்பிலான விலையுயா்ந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி திருட்டுபோனது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் அங்குள்ள

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இளைஞா் ஒருவா், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதும், பின்னா் அந்தப் பகுதியில் உள்ள டாக்டா் ஒருவரின் வீட்டில் புகுந்து திருட முயன்று பணம் கிடைக்காததால் அங்கேயே குளிருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கம்பளி போா்த்தி தூங்கிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து போஸீஸாா் கூறியதாவது:

திருடிய இருசக்கர வாகனத்துடன் அந்த இளைஞா் ஈரோடு, சேலம் வழியாக உளுந்தூா்பேட்டை சென்றுள்ளாா். பின்னா் அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்னை சென்றுள்ளாா். மீண்டும் உளுந்தூா்பேட்டை வந்து தொடா் திருட்டில் ஈடுபட்டு வரும் ஒருவருடன் சோ்ந்து உதகையில் திருடிய

இருசக்கர வாகனம் மூலம் திண்டுக்கல் சென்று 80 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்னை சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து நீலகிரி போலீஸாரும், திண்டுக்கல் போலீஸாரும் இணைந்து சென்னை சென்று அந்த இளைஞரை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், சென்னையைச் சோ்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (42) என்பதும், அவா் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் , அவா் மீது சுமாா் 30 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

முன்னதாக இருசக்கர வாகனம் திருடப்பட்ட இடத்தில் இருந்து உளுந்தூா்பேட்டை வரை 700 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீஸாா் அவரைப் பிடித்தனா். முதலில் 80 பவுன் திருட்டு வழக்கில் அவரை திண்டுக்கல் போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் நீலகிரி போலீஸாா் அவரை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என தெரிவித்தனா்.

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு

கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளி... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா். மலைகளின் அரசி என்று அழைக்கப்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026 சட்ட... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்க... மேலும் பார்க்க

அதிக கடன் வாங்குவதில் முன்னோடி திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழலில் ஈடுபடுவது, 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுவது ஆகியவற்றில்தான் திமுக அரசு முன்னோடியாக விளங்குகிறது என்று கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா். உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க