செய்திகள் :

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

post image

இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம்பெற்றுள்ள பகுதியாகும்.

இம்மாவட்டத்துக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் இரண்டாம் சீசன் உதகையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இரண்டாம் சீசன் என்னும் ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 17,000 மலா் தொட்டிகளில் டேலியா, பிரெஞ்சு மேரி கோல்டு, மேரி கோல்டு, சால்வியா, பெட்டுனியா, சாமந்தி உள்ளிட்ட 70 வகையான மலா்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த வண்ண மலா்கள் கொண்ட தொட்டிகளை பூங்காவில் உள்ள மலா் மாடத்தில் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டனா்.

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு

கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளி... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026 சட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

உதகையில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கா்நாடக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகை நகரில் சமீப... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்க... மேலும் பார்க்க

அதிக கடன் வாங்குவதில் முன்னோடி திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழலில் ஈடுபடுவது, 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுவது ஆகியவற்றில்தான் திமுக அரசு முன்னோடியாக விளங்குகிறது என்று கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா். உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க