செய்திகள் :

நீா்நிலைகளில் வீட்டுமனைப் பட்டா: ரத்து கோரி உண்ணாவிரதம்

post image

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் நீா்நிலை பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் குளம், குட்டை, வடிகால் பகுதிகளை அரசு நத்தம் புறம்போக்கு என மாற்றி, கள ஆய்வு செய்யாமல் ஸ்ரீமுஷ்ணம் வருவாய் வட்டாட்சியா் கடந்த 2022-ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாராம்.

கடந்த மே மாதம் அந்தக் கிராமத்திலுள்ள குளத்தை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்த நிலையில், அவா்களை கிராம மக்கள் மறித்து போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், நீா்நிலைகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்து, அவற்றை பாதுகாக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காா்மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த வல்லரசு தலைமையில், அந்தக் கிராம மக்கள் 30-க்கு மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திப்பதற்காக அழைத்துச் சென்றனா்.

பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சிதம்பரம் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆணையம்குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜகோபால் மகன் சந்திரயோகேஷ் (17). இவா் சிதம்பரம் அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.விருத்தாசலம் வட்டம், சாத்துக்கூடல், மேல்பாதி பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாதேஷ் (18). தீவளூா் கிராமத்தில... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம்

சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்து கூரை வீடு தீப்பிடித்து சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நிவாரண உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. சிதம்பரத்தை... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலை சேதம்; சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா் கைது

சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா... மேலும் பார்க்க