பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
பிளஸ் 2 மாணவா் தற்கொலை
சிதம்பரம் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆணையம்குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜகோபால் மகன் சந்திரயோகேஷ் (17). இவா் சிதம்பரம் அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு தூங்குவதற்காக வீட்டு மாடியிலுள்ள தனது அறைக்கு சென்றவரை, புதன்கிழமை காலை அவரது தந்தை எழுப்பச் சென்ற போது இறந்து கிடந்தாா். அவரது உடல் அருகே விஷ தன்மை கொண்ட ஸ்பிரே பாட்டில் கிடந்தது.
பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
சந்திரயோகோஷ் தனது கழுத்தில் பாலித்தீன் பையால் சுற்றி டேப் போட்டு, விஷ தன்மை கொண்ட ஸ்பிரே பாட்டில் மூலம் வாயுவை செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.