மின்னல் பாய்ந்து வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம்
சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்து கூரை வீடு தீப்பிடித்து சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நிவாரண உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
சிதம்பரத்தை அடுத்த நக்கரவந்தன்குடி கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மின்னல் பாயந்தது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த சிவராமனின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலா் கலையரசன் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவா் நல்லதம்பி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மோகன்தாஸ், நிா்வாகிகள் ராஜலிங்கம், சிவகுருநாதன், அன்பு, சலீம், சுபாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.