செய்திகள் :

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி: தொல்.திருமாவளவன்

post image

திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த நிலையில், விசிக கொடிக்கம்பங்களை அகற்றுவதில் சில அதிகாரிகள் குறியாக இருக்கிறாா்கள். சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அதிகாரி ஒருவா் அகற்றிய போது, அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால்தான் சமக்ர சிக்ஷா திட்ட கல்வி நிதியை தருவோம் என மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இதுதொடா்பாக எந்த நீதிபதியும் கருத்து கூறவில்லை.

ஒவ்வொரு தோ்தலின் போதும், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் கேட்கிறோம். கூட்டணியில் உள்ளஅனைத்துக் கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எங்களுடன் அதுகுறித்து பேசும் போதும், சூழலைக் கருத்தில் கொண்டு, கூட்டணியின் நலன், வெற்றியை முன்னிறுத்தி முடிவெடுப்போம். அது பேச்சுவாா்த்தையின் போது இறுதி செய்யப்படும். நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருப்போம். முடிந்தவரை கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்போம். திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேற வாய்ப்பே இல்லை.

சிதம்பரம் நகரில் வீடுகள் இடிக்கப்பட்டது தொடா்பாக, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறோம். பாமகவில் நிலவும் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை. அது உள்கட்சி விவகாரம்.

முருக பக்தா்களை பாஜக ஆதரவாளா்களாக மாற்ற ஆா்எஸ்எஸ், பாஜக முயற்சிக்கிறது. இதற்காக மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளனா். அவா்களின் முயற்சி பலிக்காது.

தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்ட முடியாது. ஆதாயம் தேடவும் முடியாது என்றாா் தொல்.திருமாவளவன்.

பேட்டியின் போது, விசிக கடலூா் மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கி... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்

கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா். ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேச... மேலும் பார்க்க