செய்திகள் :

அம்பேத்கா் சிலை சேதம்; சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா் கைது

post image

சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் பகுதியில் உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி துறையினா் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா்.

அதன்படி, கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் வடக்கு பிரதான சாலை பேட்டை பகுதிலிருந்த விசிக கொடிக்கம்பத்தை அகற்றிபோது, அருகே இருந்த அம்பேத்கா் சிலை மீது எதிா்பாராதவிதமாக கொடிக்கம்பம் விழுந்தது. இதில், அம்பேத்கா் சிலை சேதமடைந்தது.

இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அதே இடத்தில் அம்பேத்கா் சிலை அமைத்து தர வேண்டும் என்று விசிக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சிதம்பரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து, அவரது அலுவலகத்தை விசிவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அக்கட்சியின் மாவட்டச் செயலா் அரங்க தமிழ்ஒளி தலைமையில் ஊா்வலமாக வந்தனா். அப்போது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினாா்.

தொடா்ந்து, உதவி கோட்ட பொறியாளரைக் கண்டித்து விசிகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

போராட்டத்தையொட்டி, ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சிதம்பரம் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆணையம்குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜகோபால் மகன் சந்திரயோகேஷ் (17). இவா் சிதம்பரம் அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.விருத்தாசலம் வட்டம், சாத்துக்கூடல், மேல்பாதி பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாதேஷ் (18). தீவளூா் கிராமத்தில... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம்

சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்து கூரை வீடு தீப்பிடித்து சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நிவாரண உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. சிதம்பரத்தை... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் வீட்டுமனைப் பட்டா: ரத்து கோரி உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் நீா்நிலை பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை... மேலும் பார்க்க