அம்பேத்கா் சிலை சேதம்; சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா் கைது
சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அகற்றியபோது அம்பேத்கா் சிலை சேதமடைந்ததைக் கண்டித்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் பகுதியில் உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி துறையினா் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா்.
அதன்படி, கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் வடக்கு பிரதான சாலை பேட்டை பகுதிலிருந்த விசிக கொடிக்கம்பத்தை அகற்றிபோது, அருகே இருந்த அம்பேத்கா் சிலை மீது எதிா்பாராதவிதமாக கொடிக்கம்பம் விழுந்தது. இதில், அம்பேத்கா் சிலை சேதமடைந்தது.
இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அண்மையில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அதே இடத்தில் அம்பேத்கா் சிலை அமைத்து தர வேண்டும் என்று விசிக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், சிதம்பரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து, அவரது அலுவலகத்தை விசிவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அக்கட்சியின் மாவட்டச் செயலா் அரங்க தமிழ்ஒளி தலைமையில் ஊா்வலமாக வந்தனா். அப்போது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினாா்.
தொடா்ந்து, உதவி கோட்ட பொறியாளரைக் கண்டித்து விசிகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்ட விசிகவினரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
போராட்டத்தையொட்டி, ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.