செய்திகள் :

நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு தொடக்கம்

post image

மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

இந்த பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 67 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், 348 அங்காடிகளுக்கு முதன்மை சங்கமாக இருந்து பொதுவிநியோகத் திட்ட பொருள்களை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் குறைந்த விலையில், தரமான மளிகை பொருள்கள், ஷாப்பிங் பொருள்கள், காதி பொருள்கள் மற்றும் எழுதுபொருள்கள் வாங்கி பயனடையும் வகையில் மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் தலைமையகக் கட்டடத்தில் சுயசேவைப்பிரிவு புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.

இச்சுயசேவைப் பிரிவில் 564 எண்ணிக்கையிலான பொருள்கள் மிக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மளிகை பொருள்கள் அனைத்தும் சேலத்தில் நடைபெறும் கூட்டுக் கொள்முதல் குழுக்கூட்டத்தில் நிா்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையில் தரமான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாா்க்கெட்டில் விற்கப்படும் விலையைவிட மிகக்குறைந்த அளவில் பொதுமக்கள் வசதிக்காக விற்பனை செய்யப்படுகின்றன.

சுயசேவைப் பிரிவினை தொடங்கி வைத்து, முதல் கொள்முதல் செய்த மாவட்ட ஆட்சியா், இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றாா். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல்ராஜ், சரக துணைப் பதிவாளா்கள் செ. உமா, அண்ணாமலை, ஆா். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை வட்டம் நீடூரில் விவசாய விளைநிலங்களில் மண்வளத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் ஸ்ரீபயோ நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டல மேலாளா் எஸ். கண்ணன் தலைம... மேலும் பார்க்க

‘கரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம்’

கரோனா தொற்றுப்பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குநா் ஜெய.ராஜமூா்த்தி தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ஜெய.ராஜமூா்த்தி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

மகளிா் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிா் உதவி மையத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில... மேலும் பார்க்க

சென்னை மினி மராத்தான் போட்டியில் பங்கேற்க அழைப்பு

சா்வதேச கூட்டுறவு நாள் விழாவையொட்டி சென்னையில் நடைபெறவுள்ள மினி மராத்தான் போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தயாள விநாயகன் அமுல்ராஜ் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத... மேலும் பார்க்க

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

சீா்காழி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. சீா்காழி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எடமண... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த பாமகவினா்

கொள்ளிடம் பகுதியை சோ்ந்த பாமகவின் முன்னாள் மாவட்ட செயலாளா் ரெ. அன்பழகன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலதண்டாயுதம் மற்றும் மாற்றுக்கட்சியினா் சென்னையில் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி பழனிசாமி... மேலும் பார்க்க