ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்...
நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு தொடக்கம்
மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
இந்த பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 67 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், 348 அங்காடிகளுக்கு முதன்மை சங்கமாக இருந்து பொதுவிநியோகத் திட்ட பொருள்களை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் குறைந்த விலையில், தரமான மளிகை பொருள்கள், ஷாப்பிங் பொருள்கள், காதி பொருள்கள் மற்றும் எழுதுபொருள்கள் வாங்கி பயனடையும் வகையில் மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் தலைமையகக் கட்டடத்தில் சுயசேவைப்பிரிவு புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.
இச்சுயசேவைப் பிரிவில் 564 எண்ணிக்கையிலான பொருள்கள் மிக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மளிகை பொருள்கள் அனைத்தும் சேலத்தில் நடைபெறும் கூட்டுக் கொள்முதல் குழுக்கூட்டத்தில் நிா்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையில் தரமான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாா்க்கெட்டில் விற்கப்படும் விலையைவிட மிகக்குறைந்த அளவில் பொதுமக்கள் வசதிக்காக விற்பனை செய்யப்படுகின்றன.
சுயசேவைப் பிரிவினை தொடங்கி வைத்து, முதல் கொள்முதல் செய்த மாவட்ட ஆட்சியா், இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றாா். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல்ராஜ், சரக துணைப் பதிவாளா்கள் செ. உமா, அண்ணாமலை, ஆா். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.