செய்திகள் :

நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு தடை விதிக்காதது ஏன்?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

post image

‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வகை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வகை நெகிழி (பிளாஸ்டிக்) மலா்களுக்கு மட்டும் தடை விதிக்காதது ஏன்?’ என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக இந்திய மலா் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு நெகிழிப் பொருள்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை காரணமாக வைத்து மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான நெகிழி மலா்கள் 30 மைக்ரான் அளவில் உள்ளது. இந்த அளவில் உள்ள மற்ற நெகிழி பொருள்களுக்கு மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநில அரசு 100 மைக்ரான் பருமனுக்கு குறைவாக எந்த நெகிழிப் பொருளையும் விற்கக் கூடாது என்றும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. ஆனால், 30 மைக்ரான் அளவில் நெகிழிப் பூக்கள் மட்டும் தராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படுகின்றன. எனவே, இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அலோக் அராத், பாரதி டாங்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நெகிழி மலா்களை மறுசுழற்சி செய்ய முடியுமா? அல்லது அவை எளிதில் மக்கும் தன்மையுடையதா? பிறகு ஏன் அவற்றை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் மத்திய அரசு சோ்க்கவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இது தொடா்பாக இரு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க