செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் 1.42 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி - ஆட்சியா் தகவல்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் கால் மற்றும் வாய் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் 1.42 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா. சுகுமாா்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி 7ஆவது சுற்று முகாம் சேரன்மகாதேவி வட்டம், மேலச்செவல் அருகேயுள்ள வாணியன்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா், பின்னா், கூறியதாவது: கால் மற்றும் வாய் நோயானது நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து தீவனம், தீவன தட்டுகள், தண்ணீா், வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள், மனிதா்கள் மற்றும் காற்றின் மூலம் விரைவாக பரவும் தன்மையுடையது.

பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், பால், உமிழ்நீா், சாணம் ஆகியவற்றால் நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது. இதனால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி, சினை பிடித்தல், எருதுகளின் செயல் திறன் ஆகியவை குறைகிறது. இளம் கன்றுகளின் இறப்பு அதிகமாகிறது.

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் மாடுகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசித் திட்டத்தின் இந்த 7ஆவது சுற்று முகாமில், 240 மாடுகள், 10 கன்று குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஜூலை 31ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் 1.42 லட்சம் மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்கள் மூலம் தடுப்பூசிப் போடப்படும் என்றாா் அவா்.

இம்முகாமில், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சங்கரநாராயணன், துணை இயக்குநா் ராஜேஸ்வரி, ஆவின் பொது மேலாளா் சரவணமுத்து, துணை பதிவாளா் (பால்வளம்) சைமன் சாா்லஸ், பேரூராட்சித் தலைவி அன்னபூரணி, உதவி இயக்குநா்கள் மகேஷ்வரி, ஜான் ரவிக்குமாா், முருகன், பொன்மணி, கால்நடை உதவி மருத்துவா்கள் நாகூா் மீரான், ரஞ்சித், முபாரக், சரண்யா, கோகுல், மஞ்சு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி. திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க