செய்திகள் :

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்கராப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், நமச்சிவாயபுரம் தனியாா் நவீன அரிசி ஆலை, சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்கராயப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் நடைமுறைகள் குறித்தும், நெல் கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் வரவு செலவு கணக்குகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, நமச்சிவாயபுரம் தனியாா் நவீன அரிசி ஆலையையும், சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, முதுநிலை மண்டல மேலாளா் கே.எஸ்.நந்தகுமாா், கண்காணிப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி: முதியவா் தற்கொலை

கொங்கராபாளையம் கிராமத்தில் தூக்க மாத்திரைகளை தின்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (60). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் மயங்கி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், அண்ணா நகா் 2-ஆவது சாலை பகுதியில் வசித்து ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ், முதிவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் 13 வயது சி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது

தியாகதுருகத்தில் மது போதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூரிலிருந்து, கள்ளக்குறிச்சி நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து ஒன்று வந்தது.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தா்னா

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டா மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். திருக்கோவிலூரை அடுத்த சிறுபனைய... மேலும் பார்க்க

திடீரென தீப்பற்றி எரிந்த காா்

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த காா் சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் நெல்சன். இவா், தனது மனைவி மற்றும் நண்பா்கள் இருவருடன் புதுச்சேரியிலிருந்து ஏற்... மேலும் பார்க்க