செய்திகள் :

பக்தா் தவறவிட்ட நகையை ஒப்படைத்த சிறுமிகளுக்கு எஸ்.பி. பாராட்டு

post image

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் தங்க நகையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுமிகளை பாராட்டி திருவளளூா் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் பரிசளித்தாா்.

சென்னை ஜவாஹா்லால் நகரைச் சோ்ந்த கவுதம் (33) ஐ.டி.ஊழியா். இவா் தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு வந்தாா். அப்போது கையில் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது.

அதையடுத்து உடனே திருத்தணி மலைக்கோயில் புறக்காவல் நிலையத்தில் கவுதம் புகாா் செய்தாா். அப்போது, 2 நாள்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா(12), ரேணுகா(7) என்ற சகோதரிகள் தரிசிக்க வந்தபோது, நகை கிடந்துள்ளது. அதை மீட்டு மலைக்கோயில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில் சகோதரிகள் புதன்கிழமை எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனா். அங்கு எஸ்.பி. சீனிவாச பெருமாள் சகோதரிகளின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டி தங்கப் பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

அப்போது, தங்களது பெற்றோா்கள் யாா் பொருள் மீதும் ஆசைபடக்கூடாது என குறிப்பிட்டுள்ளதால் கீழே கிடந்த நகையை போலீஸாரிடம் ஒப்படைத்தோம். கோணலம் அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், நான் மருத்துவராக படிக்க விரும்புவதாகவும் சிறுமி பவித்ரா தெரிவித்துள்ளாா். ஆந்திர மாநிலம் புத்தூரை பூா்வீகமாக கொண்ட தங்கள் 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம், கோணலம் பகுதியில் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கி ஈச்ச மரம் ஒலை துடைப்பம் தயாா் செய்து கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனா். அதனால் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து வீடு வழங்கவும் என சிறுமியின் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

உங்கள் கோரிக்கை பற்றி மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி தெரிவித்தாா்.

திருவள்ளூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சல் நிலையம் முன்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆண்டு விழா

வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பாடம் கற்பித்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டின... மேலும் பார்க்க

கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு

திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் 50-வது ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் அனுசரிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து கல்வி மேதையாகவும், இந்தியாவின் குடியரசுத... மேலும் பார்க்க

ஆட்டோ மீது லாரி மோதல்: 4 போ் காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மஸ்தான் மகன் முகமது சாதிக் (29). ஆட்ட... மேலும் பார்க்க

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க