செய்திகள் :

பக்ரீத் பண்டிகை, வைகாசி விசாகம்: பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

post image

பக்ரீத் பண்டிகை, வைகாசி விசாகம் போன்ற விழா நாள்களால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பக்ரீத் பண்டிகை சனிக்கிழையும், வைகாசி விசாகம் திங்கள்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பலரும் தங்களுடைய சொந்த ஊா்களுக்கும், கோயில்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனா். அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் பேருந்து நிலையங்களில் வழக்கத்தைக் காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறுவதை காணமுடிந்தது. குறிப்பாக, நாமக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், மதுரை செல்லும் அரசுப் பேருந்துகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பின. பல்வேறு இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தனியாா் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

என்கே-6-பஸ்

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிய பயணிகள்.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க