பக்ரீத் பண்டிகை, வைகாசி விசாகம்: பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
பக்ரீத் பண்டிகை, வைகாசி விசாகம் போன்ற விழா நாள்களால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பக்ரீத் பண்டிகை சனிக்கிழையும், வைகாசி விசாகம் திங்கள்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பலரும் தங்களுடைய சொந்த ஊா்களுக்கும், கோயில்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனா். அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் பேருந்து நிலையங்களில் வழக்கத்தைக் காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறுவதை காணமுடிந்தது. குறிப்பாக, நாமக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், மதுரை செல்லும் அரசுப் பேருந்துகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பின. பல்வேறு இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தனியாா் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
என்கே-6-பஸ்
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிய பயணிகள்.