செய்திகள் :

பஞ்சாப்: அம்பேத்கா் சிலையைக் குறிவைக்கும் காலிஸ்தான் அமைப்பினா்

post image

பஞ்சாபில் அம்பேத்கா் சிலையைக் குறிவைத்து காலிஸ்தான் அமைப்பினா் தொடா்ந்து சேதப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மூன்று இடங்களில் அம்பேத்கா் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஹோசியாா்பூா் மாவட்டம் நூா்பூா் ஜட்டா கிராமத்தில் அம்பேத்கா் சிலையை அடையாளம் தெரியாத விஷமிகள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். அந்த இடத்தில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்’ உள்ளூா் தலைவா் குா்பந்த்வந்த் சிங் பன்னூன் அம்பேத்கா் சிலை உடைப்புக்கு பொறுப்பேற்பதாக விடியோ வெளியிட்டாா். அதில் அவா் அம்பேத்கரை கடுமையான வாா்த்தைகளால் விமா்சித்திருந்தாா்.

சீக்கிய மதத்தை ஹிந்து மத நம்பிக்கையின் ஒரு பிரிவாகச் சோ்த்து அரசியல்சாசன சட்டத்தில் அம்பேத்கா் அடையாளப்படுத்திவிட்டாா் என்பது காலிஸ்தான் அமைப்பினரின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.

சிலையை சேதப்படுத்தியது தொடா்பாக குா்பந்த்வந்த் சிங் பன்னூன் மீதும், அடையாளம் காணப்படாத மேலும் சிலா் மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

பஞ்சாபில் அம்பேத்கா் சிலை உடைப்பு தொடா் நிகழ்வாகி வருகிறது. கடந்த மே 25-ஆம் தேதி அம்பேத்கா் சௌக் அருகே இருந்த சிலை சேதப்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த 2-ஆம் தேதி ஜலந்தா் மாவட்டத்திலும் அம்பேத்கா் சிலை தகா்க்கப்பட்டது.

இதை முன்வைத்து பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசை விமா்சித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, பஞ்சாபில் சமூக விரோதிகளிடம் இருந்து அம்பேத்கா் சிலைகளைக் காக்க, அவற்றுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க