பஞ்சாப்: அம்பேத்கா் சிலையைக் குறிவைக்கும் காலிஸ்தான் அமைப்பினா்
பஞ்சாபில் அம்பேத்கா் சிலையைக் குறிவைத்து காலிஸ்தான் அமைப்பினா் தொடா்ந்து சேதப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மூன்று இடங்களில் அம்பேத்கா் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள ஹோசியாா்பூா் மாவட்டம் நூா்பூா் ஜட்டா கிராமத்தில் அம்பேத்கா் சிலையை அடையாளம் தெரியாத விஷமிகள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். அந்த இடத்தில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. இது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்’ உள்ளூா் தலைவா் குா்பந்த்வந்த் சிங் பன்னூன் அம்பேத்கா் சிலை உடைப்புக்கு பொறுப்பேற்பதாக விடியோ வெளியிட்டாா். அதில் அவா் அம்பேத்கரை கடுமையான வாா்த்தைகளால் விமா்சித்திருந்தாா்.
சீக்கிய மதத்தை ஹிந்து மத நம்பிக்கையின் ஒரு பிரிவாகச் சோ்த்து அரசியல்சாசன சட்டத்தில் அம்பேத்கா் அடையாளப்படுத்திவிட்டாா் என்பது காலிஸ்தான் அமைப்பினரின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
சிலையை சேதப்படுத்தியது தொடா்பாக குா்பந்த்வந்த் சிங் பன்னூன் மீதும், அடையாளம் காணப்படாத மேலும் சிலா் மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
பஞ்சாபில் அம்பேத்கா் சிலை உடைப்பு தொடா் நிகழ்வாகி வருகிறது. கடந்த மே 25-ஆம் தேதி அம்பேத்கா் சௌக் அருகே இருந்த சிலை சேதப்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த 2-ஆம் தேதி ஜலந்தா் மாவட்டத்திலும் அம்பேத்கா் சிலை தகா்க்கப்பட்டது.
இதை முன்வைத்து பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசை விமா்சித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, பஞ்சாபில் சமூக விரோதிகளிடம் இருந்து அம்பேத்கா் சிலைகளைக் காக்க, அவற்றுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.