செய்திகள் :

பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்கு மாா்ச் 3-இல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

post image

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தால் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பணிபுரிவது குறித்த பயிற்சி வகுப்பு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சனிக்கிழமை சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் (பயிற்சி மையம்) இணை இயக்குநா் ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் அருகேயுள்ள பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி மையத்தில், வருகிற 3 முதல் 7-ஆம் தேதி வரையிலும், 10 முதல் 14-ஆம் தேதி வரையிலும், 17 முதல் 21- ஆம் தேதி வரையிலும், 24 முதல் 28-ஆம் தேதி வரையிலும் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாகப் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில், விருதுநகா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கு பெறலாம்.

மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோரும், கல்லூரியில் வேதியல் பாடப் பிரிவில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கும் இதில் கலந்து கொள்ளலாம்.

ஆலை உரிமையாளா்களுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியும், பயிற்சி பெறாத கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் ரூ.5 ஆயிரத்துக்கான வரைவோலையை செலுத்திப் பயிற்சிக்கு வர வேண்டும் என்றாா் அவா்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையத்தில் தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் தெற்கு நகரக் கழகம் சாா்பில், அம்பலபுளி கடைவீதி நான்கு முக்குப் பகுதியில் சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி (57). இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். இந்த நில... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்ல மேம்பாலம் அருகே பாதை அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாக சென்று வர மேம்பாலம் அருகே பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த மூவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் ஓா் வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திரு... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு தமிழ் செம்மல் விருது

சிவகாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கா.காளியப்பனுக்கு, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசியில் சனிக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி போஸ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இ... மேலும் பார்க்க