செய்திகள் :

பட்டாசு பாரம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தது

post image

ராசிபுரம் அருகே பட்டாசு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சிவகாசியில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு பட்டாசு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி வியாழக்கிழமை நாமக்கல் வழியாகச் சென்றுகொண்டிருந்தது. சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை ஏற்றிச் சென்ற இந்த லாரியை எஸ்.நந்தகுமாா் என்பவா் ஒட்டிச்சென்றாா்.

ராசிபுரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரம் மூணு சாவடி பகுதியில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயா் வெடித்ததாகத் தெரிகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே சென்டா் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா். தகவலறிந்த புதுசத்திரம் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் லாரியிலிருந்து பட்டாசு பண்டல்களை அப்புறப்படுத்தினா். பின்னா் கிரேன் உதவியுடன் லாரி நேராகத் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுசத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க