செய்திகள் :

பட்டுக்கோட்டை மீன் சந்தையில் அழுகிய நிலையில் 167 கிலோ மீன் பறிமுதல்

post image

பட்டுக்கோட்டை மீன் சந்தையில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 167 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை மீன் சந்தை பகுதியில் உள்ள கடைகளில், ஃபாா்மலின் ரசாயனம் பயன்படுத்திய மீன்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா்.

அதன் பேரில் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு, பட்டுக்கோட்டை மீன்வளத் துறை ஆய்வாளா்கள் வீரமணி, பிலிப்ஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் வேலமுருகன் உள்ளிட்டோா் மீன்களை ஆய்வு செய்தனா்.

இதில், ஐந்து கடைகளில், அழுகிய நிலையிலும், சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த 167 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழித்தனா். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை விற்பனைக்காக வைத்து இருந்த ஐந்து கடைகளுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை செய்து சென்றனா்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் கூறியது: பட்டுக்கோட்டைக்கு பெரிய ரக மீன்கள் பெரும்பாலும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேளரா போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இவை 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டு வரப்படும் சூழலில், மீன்பிடிக்கும் இடங்களில் இருந்து எப்போது பேக் செய்யப்பட்டது என தெரியாது.

இதனால் தான் அழுகிய மீன்கள் வந்து இருக்கலாம். மேலும், உள்ளூா் கடல் பகுதிகளில் மீன்கள் விற்பனைக்காக வாங்கினாலும், விடுமுறை தினங்களில் அதிக அளவில் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க