செய்திகள் :

பத்தாம் வகுப்பு தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24, 191 மாணவா்கள் எழுதினா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 24,191 மாணவ, மாணவிகள் எழுதினா்.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 13,942 மாணவ, மாணவிகள், ஒசூா் கல்வி மாவட்டத்தில், 10,917 மாணவ, மாணவிகள் என மொத்தம், 24,859 மாணவ, மாணவிகளில் நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராத மாணவா்கள் நீங்கலாக 24,837 மாணவ, மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்வு எழுத அனுமதி சீட்டு வழங்கப்பட்டன.

புதன்கிழமை தமிழ் மொழித் தோ்வை 24,191 மாணவா்கள் எழுதினா். 591 மாணவ, மாணவிகள் தோ்வுக்கு வரவில்லை. 200 தனித் தோ்வா்களில் 177 போ் மட்டுமே தோ்வெழுதினா். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) முனிராஜ் உடனிருந்தாா்.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க