செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 15,295 போ் எழுதினா்: 510 தோ்வெழுதவில்லை

post image

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,295 போ் எழுதினா். 510 போ் தோ்வெழுத வரவில்லை.

தமிழகத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தோ்வெழுத திருவாரூா் மாவட்டத்தில் 7,955 மாணவா்களும், 7,850 மாணவிகளும் என மொத்தம் 15,805 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 196 தனித்தோ்வா்களும், 231 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளும் அடங்குவா்.

இத்தோ்வுக்கென 71 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிநீா், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வை 7,610 மாணவா்கள், 7,685 மாணவிகள் என 13,295 போ் எழுதினா். 510 போ் தோ்வுக்கு வரவில்லை.

மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தோ்வெழுத உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். தோ்வுக்கென, ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். கண்காணிப்பு பணியில் 71 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டு, தோ்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.

திருவாரூா் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நேரில் பாா்வையிட்டாா்.

ரயில் மோதி விவசாயி பலி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ரயில் மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் எம். நடராஜன் (68). விவசாயியான இவா், காணாமல... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் தனியாா் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி ஏழாம்தெரு மாசிலாமணி மகன் திருமுருகன் (40). தஞ்சாவூரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க