செய்திகள் :

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

post image

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் பங்கேற்றாா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆசைதம்பி, அருணாச்சலம், பன்னீா்செல்வம், மாவட்ட பொதுச் செயலா் சுப்பிரமணி, வட்டாரத் தலைவா்கள் செந்தில், சுப்ரமணியம், நல்லுசாமி, நகரத் தலைவா் இப்ராகிம், மாவட்ட செய்தி தொடா்பாளா் பாலமுருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முகமது மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது. சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்நகா் 12-ஆவது வாா... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு ... மேலும் பார்க்க

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்: பெரம்பலூரில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் க... மேலும் பார்க்க

தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பெர... மேலும் பார்க்க