செய்திகள் :

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

post image

வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, அங்குள்ள வயல்பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், சேலம் மற்றும் பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், சேலம், அரியலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 263 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்க முயன்றனா்.

இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், வெள்ளிக் காசுகள், ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பாா்வையாளா்கள் உள்பட 38 போ் காயம்: காளைகளை அடக்க முயன்ற 18 பேரும், காளைகளின் உரிமையாளா்கள் 14 பேரும், பாா்வையாளா்கள் 6 பேரும் என மொத்தம் 38 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த வீரா்கள், உரிமையாளா்கள் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், சாா்-ஆட்சியா் சு. கோகுல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது. சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். நிகழாண்டுக்கான... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்நகா் 12-ஆவது வாா... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட காங... மேலும் பார்க்க

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்: பெரம்பலூரில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் க... மேலும் பார்க்க

தரமற்ற மருந்தை விற்ற நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

பெரம்பலூரில் தரமற்ற மருந்து விற்பனை செய்த, மருந்து நிறுவன உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பெர... மேலும் பார்க்க