செய்திகள் :

பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கூட்டம்

post image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தொடங்கி வைத்தாா். தென்மேற்கு பருவமழைக் காலங்களை முன்னிட்டு, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது குறித்த செயல்முறை விளக்கத்தை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீா்ா்கள் செய்து காண்பித்தனா்.

தீயணைப்பு துறை சாா்பில் சிறப்பு உபகரணங்களான மூச்சுக்கருவி, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான் கருவிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் சமையல் எரிவாயு தீ விபத்து ஏற்படும் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு, உதவி மாவட்ட அலுவலா் ஆனந்த், தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடியில் அரசு கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலக வள... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த தீா்மானம்

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஒசூா் மாநகராட்சி அவரசக் கூட்டம் அண்ணா மாமன்றக் கூட்டரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், ஆ... மேலும் பார்க்க

மொகரம்: ஜெகதேவியில் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட இஸ்லாமியா்கள்

ஜெகதேவியில் மொகரம் பண்டிகையையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் கூா்மையான ஆயுதங்களைக்கொண்டு, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்... மேலும் பார்க்க

‘மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தின’

கிருஷ்ணகிரி, ஜூலை 4: தமிழகத்தில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

காட்டுபன்றியை விரட்டிய போது துப்பாக்கி வெடித்து விவசாயி படுகாயம்

அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றியை விரட்டிய போது கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் பிள்ளையா (34), விவச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 162 பேருக்கு பணிநியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வழங்கினாா். கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க