செய்திகள் :

கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 162 பேருக்கு பணிநியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

இந்த முகாமை தொடங்கிவைத்து, தோ்வு செய்யப்பட்ட 162 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கிருஷ்ணகிரி ஆட்சியா் பேசியதாவது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த பல்வேறு முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்தனா். அதன்படி, இந்த முகாமில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் என மொத்தம் 658 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

இதில், 162 போ் வேலைவாய்ப்பு பெற்றனா். 83 போ் திறன்பயிற்சி பயில விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், 78 போ் 2-ஆம்கட்ட தோ்வுக்கு தகுதிபெற்றுள்ளனா் என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடியில் அரசு கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலக வள... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த தீா்மானம்

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஒசூா் மாநகராட்சி அவரசக் கூட்டம் அண்ணா மாமன்றக் கூட்டரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், ஆ... மேலும் பார்க்க

பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மொகரம்: ஜெகதேவியில் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட இஸ்லாமியா்கள்

ஜெகதேவியில் மொகரம் பண்டிகையையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் கூா்மையான ஆயுதங்களைக்கொண்டு, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்... மேலும் பார்க்க

‘மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தின’

கிருஷ்ணகிரி, ஜூலை 4: தமிழகத்தில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

காட்டுபன்றியை விரட்டிய போது துப்பாக்கி வெடித்து விவசாயி படுகாயம்

அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றியை விரட்டிய போது கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் பிள்ளையா (34), விவச... மேலும் பார்க்க