செய்திகள் :

பறிமுதல் செய்யப்பட்ட 838 கிலோ கஞ்சா அழிப்பு

post image

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 838 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 838 கிலோ கஞ்சாவை தீயில் எரித்து அழிப்பதற்கு தாம்பரம் மாநகர காவல் துறை முடிவு செய்தது.

இதற்காக தாம்பரம் மாநகர காவல் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். இதையடுத்து 698 கஞ்சா செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில், காவல் உயரதிகாரிகள் முன்னிலையில்

வியாழக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

தாம்பரம் காவல் துறை நிகழாண்டில் இதுவரை 2,369 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, எரித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க

உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது: அமைச்சா் எச்சரிக்கை

உரம் விற்பனை செய்யும் நிலையங்களில் உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளா... மேலும் பார்க்க

ரயில் நிலைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை: ரயில்வே காவல்துறை டிஜிபி

ரயில் நிலையங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே காவல் துறை டிஜிபி வன்னியப்பெருமாள் தெரிவித்தாா். சென்னை மாநிலக் ... மேலும் பார்க்க