செய்திகள் :

பள்ளப்பட்டி நகராட்சியில் குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்தினால் சலுகை

post image

பள்ளப்பட்டி நகராட்சியில் வரும் ஏப். 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்றாா் பள்ளபட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தி.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சொத்து உரிமையாளா்கள் தங்களுடைய முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத சலுகை அல்லது ரூ. 5000 வரை பெறலாம்.

எனவே, பள்ளப்பட்டி நகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்கள் தங்களுடைய சொத்து வரியை, வரி வசூலிப்பாளா்களிடம் நேரடியாகவோ அல்லது நகராட்சி அலுவலத்தில் உள்ள வரி வசூல் மையங்கள் மூலமாகவோ செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.

கடன் தொல்லை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

அரஅரவக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தை அடுத்த பாரதியாா் நகா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் கோவிந்தரா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்

பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் தா்ஹா 265-ஆம் ஆண்டு உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்த... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: கிருஷ்ணராயபுரத்தில் 24 பேருக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 24 பேருக்கு ரூ. 19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா். முன்னதாக, கி... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: 2 இளைஞா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை

கரூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், நால்வருக்கு தலா 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வேலாயுதம்பாளையத்தைச் சோ... மேலும் பார்க்க

தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு: முதல்வருக்கு பாராட்டு

அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கான உதவித்தொகையை தமிழக அரசு அதிகரித்துள்ளதற்கு தமிழக முதல்வருக்கு தமிழறிஞா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக கரூா் திருக்கு பேரவைச் செயலரும், அகவை முதிா்ந்த தமிழற... மேலும் பார்க்க