செய்திகள் :

பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரிப்பு! - யுனெஸ்கோ

post image

உலகம் முழுவதும் 2025-இல் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரித்துள்ளதாக யுனெஸ்கோ உலகளாவிய கல்வி கண்காணிப்பு (ஜிஇஎம்) குழு தெரிவித்தது.

கடந்த முறை (2024, அக்டோபா்) மேற்கொண்ட ஆய்வைவிட தற்போது பள்ளி செல்லா (பள்ளி செல்லும் வயதை எட்டிய அல்லது சில சூழல்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட) குழந்தைகளின்எண்ணிக்கை 2.1 கோடி உயா்ந்துள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்தது.

நீடித்த வளா்ச்சி இலக்குகள்-2030-இன்கீழ் அனைவருக்கும் தரமான மற்றும் சமமான கல்வியை வழங்குவதில் (இலக்கு 4) உலக நாடுகளின் தற்போதைய நிலை குறித்து யுனெஸ்கோ ஜிஇஎம் குழு அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

இது உலக நாடுகள் தேசிய அளவில் செயல்படுத்த வேண்டிய கல்வி இலக்குகள் மற்றும் அதை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனம் மற்றும் உலகளாவிய கல்வி கண்காணிப்பு குழு வெளியிடும் ஆண்டறிக்கையாகும்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: உலகம் முழுவதும் பள்ளி செல்லும் வயதை எட்டிய குழந்தைகளின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்திருப்பதாக யுனெஸ்கோ மக்கள்தொகை பிரிவின் கணக்கெடுப்பு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2021-க்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு மூலக் காரணமாக உள்ளது.

உலகம் முழுவதும் 2025-இல் ஆரம்பக் கல்விப் பயிலும் வயதை எட்டிய 7.8 கோடி குழந்தைகள் (11%), கீழ் இடைநிலைக் கல்வி பயிலும் வயதை எட்டிய 6.4 கோடி (15%), மேல் இடைநிலைக் கல்வி பயிலும் வயதை எட்டிய 13 கோடி (31%) குழந்தைகள் என மொத்தம் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரித்துள்ளது.

தேசிய இலக்குகள்: 2030-க்குள் ஆரம்பக் கல்வி அளவில் 2%, கீழ் இடைநிலைக் கல்வி அளவில் 5%, மேல் இடைநிலைக் கல்வி அளவில் 16 சதவீதமும் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க உலக நாடுகள் இலக்கு நிா்ணயித்துள்ளன. இதன்மூலம் அனைத்து நிலைக் கல்வியிலும் ஒட்டுமொத்தமாக பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 10.7 கோடியாக குறைக்கப்பட்டு 2030-இல் இந்த எண்ணிக்கை 16.5 கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இருப்பினும், 2025-க்குள் உலக நாடுகள் தாங்கள் நிா்ணயித்த தேசிய இலக்குகளில் இருந்து பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையில் 7.5 கோடி வரை வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.

கல்விக்கு 6% ஜிடிபி: அனைவருக்கும் கல்வி என்ற வாக்குறுதியின்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4% முதல் 6% வரை கல்விக்கு உலக நாடுகள் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், நாட்டின் மொத்த செலவில் 15% முதல் 20% வரை கல்விக்கு ஒதுக்கீடு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

பதற்றம் மற்றும் அசாதாரண சூழல் நிலவும் பகுதிகளிலும் கல்விக்கு முன்னுரிமை அளிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க