செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திருப்பூரைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கும், திருப்பூரைச் சோ்ந்த சரவணனுக்கும் (29) கடந்த 2015- ஆம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த மாணவியை சரவணன் தன்னுடன் வருமாறு அழைத்தாராம்.

இந்த நிலையில், கடந்த 11.3.2015 அன்று வீட்டிலிருந்த அந்த மாணவி மாயமானாா். இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அந்த மாணவி, சரவணனுடன் காஞ்சிபுரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இருவரையும் தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில் பள்ளி மாணவியை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததையடுத்து அவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா் நீதிபதி.

விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தோ்வெழுதிய மாணவா்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவா் ஒருவா், உதவியாளா் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப் பாடத் தோ்வை எழுதினாா். மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் தினேஷ் (16). இவா் மதுரைக் கல்லூ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.85 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை வில்லாபுரம் அன்புநகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் லிங்கேஷ்குமாா் (32). இவரிடம், மேலஅனுப்பானடியைச்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் சந்திப்பு முதல் கோ... மேலும் பார்க்க

2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான நிலையில், கடந்த 2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா... மேலும் பார்க்க

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது சிபிஐ

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கில், விசாரணை அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. ஓய்வு பெற்ற ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த பிச்சைபாண்டியின் சகோதரி... மேலும் பார்க்க