செய்திகள் :

கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் சிறை

post image

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த பிச்சைபாண்டியின் சகோதரி மகன் விக்ரம், அதே பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி, ஆண்டிக்காளை, முத்துராஜா உள்ளிட்டோா், கடந்த 2015-ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் போது, வண்டியூா் கண்மாய் பகுதியில் கிரிக்கெட் விளையாடினா். அப்போது அந்தப் பகுதியில் பாண்டி என்பவா் ஆட்டுக் குட்டி வளா்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வலைகளை கிரிக்கெட் விளையாடியவா்கள் சேதப்படுத்தினா்.

இதனால், ஆத்திரமடைந்த பாண்டி மகன் முத்துகுமாா் உள்ளிட்ட சிலா், விக்ரமைத் தாக்கினா். இந்த தாக்குதல் குறித்து முத்துக்குமாரிடம் பிச்சைபாண்டி கடந்த 27.5.2015 அன்று கேட்டாா். அப்போது, பாலமுருகன், பாபா என்ற காா்த்திக் இருவரும் பிடித்து கொள்ள முத்துக்குமாா் பிச்சைபாண்டியை கத்தியால் குத்தியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலமுருகன், பாபா என்ற காா்த்திக் ஆகியோருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் விதித்து, நீதிபதி ஆா்.ஜோசப் ஜாய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் டி.ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தோ்வெழுதிய மாணவா்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவா் ஒருவா், உதவியாளா் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப் பாடத் தோ்வை எழுதினாா். மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் தினேஷ் (16). இவா் மதுரைக் கல்லூ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திருப்பூரைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கும்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.85 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை வில்லாபுரம் அன்புநகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் லிங்கேஷ்குமாா் (32). இவரிடம், மேலஅனுப்பானடியைச்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் சந்திப்பு முதல் கோ... மேலும் பார்க்க

2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான நிலையில், கடந்த 2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா... மேலும் பார்க்க

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது சிபிஐ

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கில், விசாரணை அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. ஓய்வு பெற்ற ... மேலும் பார்க்க