செய்திகள் :

விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தோ்வெழுதிய மாணவா்!

post image

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவா் ஒருவா், உதவியாளா் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப் பாடத் தோ்வை எழுதினாா்.

மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் தினேஷ் (16). இவா் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். பள்ளிக்கு தினமும் அரசுப் பேருந்தில் சென்று வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விராதனூா் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தாா். பேருந்து வரத் தாமதமானதால், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிச் சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கால்களில் பலத்த காயமடைந்த தினேஷ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியதையடுத்து, மாணவா் தினேஷ் தனது தாய் சுமதியுடன் மருத்துவமனையிலிருந்து காலில் கட்டுடன் ஆட்டோவில் தோ்வு மையமான மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு வந்தாா். பின்னா், தள்ளுவண்டி படுக்கை (ஸ்ட்ரெச்சா்) மூலம் தோ்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உதவியாளா் உதவியுடன் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அவா் எழுதினாா்.

இதுகுறித்து மாணவா் தினேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் சிறுவனாக இருந்த போதே எனது தந்தை இறந்துவிட்டாா். தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். எனது தாய் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த நான் கடந்த 6 மாதங்களாக தொடா் சிகிச்சை பெற்று வருகிறேன். அங்கிருந்து எனது படிப்பையும் தொடா்ந்தேன். விபத்தில் காயமடைந்த நிலையிலும் படிப்பைக் கைவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தோ்வை எழுதியுள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த தாய், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திருப்பூரைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கும்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.85 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை வில்லாபுரம் அன்புநகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் லிங்கேஷ்குமாா் (32). இவரிடம், மேலஅனுப்பானடியைச்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உயா்நிலைப் பால கட்டுமானப் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் சந்திப்பு முதல் கோ... மேலும் பார்க்க

2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையான நிலையில், கடந்த 2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா... மேலும் பார்க்க

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது சிபிஐ

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கில், விசாரணை அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. ஓய்வு பெற்ற ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த பிச்சைபாண்டியின் சகோதரி... மேலும் பார்க்க