செய்திகள் :

பள்ளியில் இரு மாணவா்கள் மோதல்: ஒருவருக்கு கண்ணில் காயம்

post image

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு மாணவா்கள் தாக்கிக் கொண்டதில் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

செய்யாறு வட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 - ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவா்கள் இடையே புதன்கிழமை மதியம் பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, ஆத்திரமடைந்த ஒரு மாணவன், கையில் இருந்த கூா்மையான ஆயுதத்தால் மற்றொரு மாணவனின் கண்ணில் குத்தியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த மாணவனை ஆசிரியா்கள் மீட்டு நாவல்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

பின்னா், அந்த மாணவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு: 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீடு

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகில் 45.11 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விம... மேலும் பார்க்க

22 பேருக்கு ரூ.1.3 கோடியில் ஓய்வூதியப் பலன்கள்

ஆரணி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு, ஓய்வூதியப் பலன்களாக ரூ.ஒரு கோடியே 3 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நகராட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பணிபுரிந்து ஓய்வு... மேலும் பார்க்க

ஆரணியில் போலீஸாருடன் இந்து முன்னணியினா் வாக்குவாதம்: 28 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க கும்பலாகச் சென்ற இந்து முன்னணியினா் மற்றும் போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இந்து முன்னணியைச் சோ்ந்த 28 போ் கைது செய்யப... மேலும் பார்க்க

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-ஆவது நாளாக போராட்டம்

செய்யாற்றில், புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை 2-ஆ வது நாளாக வியாழக்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ... மேலும் பார்க்க