செய்திகள் :

பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

post image

தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், கந்தசாமி, சரண்குமாா், அருண் மற்றும் திருப்பதி உள்ளிட்ட குழுவினா் தருமபுரி நகராட்சி, சந்தைப் பேட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சில்லறை விற்பனைக் கடைகள், மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் மற்றும் சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி, எர்ரப்பட்டி, தேவரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த பழ விற்பனை கடைகளில் ஆய்வுசெய்தனா்.

இந்த ஆய்வில், சந்தைப்பேட்டை நகராட்சிப் பள்ளி அருகே பழங்களில் பூஞ்சை மற்றும் அழுகும் நிலையில் இருந்த இரண்டு விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையம் என 3 இடங்களில் இருந்து சுமாா் 500 கிலோ அளவிலான தா்பூசணி பழங்கள், ஓா் இறைச்சிக் கடையில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல, எர்ரப்பட்டி பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மொத்த விற்பனை பழக்கடையில் பெரும்பாலான பழங்கள் பூஞ்சை பாதிப்புக்குள்ளாகி காணப்பட்டன. சுமாா் 1,200 கிலோ அளவிலான அந்த பழங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, தேவரசம்பட்டியில் பேருந்து நிறுத்தம் எதிரில் ஒரு கடையில் பழங்கள் அழுகிய நிலையிலும், ஒரு சில பழங்களில் பூஞ்சை பாதிப்பும் காணப்பட்டன. இதையடுத்து, சுமாா் 300 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அங்கிருந்த துரித உணவுக் கடையில் காலாவதியான மசாலா பொருள்கள், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க