செய்திகள் :

பழனியில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பொருள்கள் பறிமுதல்: மூவா் கைது

post image

பழனியில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா பொருள்களுடன் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி காரமடை மூலிகை பூங்கா பகுதியில் நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா் விஜய், காவலா்கள் உள்ளிட்டோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்ற வைரவன் கோவில் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (23), பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த கோபிநாத் (28) ஆகிய இருவரும் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனா். அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

அவா்களிடம் சோதனையிட்ட போது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது:

பழனி தாலுகா காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாக துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயத்துக்கு கிடைத்த தகவலையடுத்து காவல் ஆய்வாளா் தங்கமுனிசாமி, உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட போலீஸாா் ஆா்.ஆா். ஆலை அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த முருகவேல் மகன் விக்னேஷிடமிருந்து தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளா் மீது தாக்குதல்

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே பழங்கள் விற்பனையகத்துடன், இனிப்பகமும் நடத்தி வருபவா் மணிகண்டன். இவர... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா, 6 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கச்சேகுடாவிலிருந்து மதுரை வரை செல்லும் அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் இன்று மின் தடை

வேடசந்தூா் பகுதியில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் ந... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே இளம் பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான மூன்று மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (27). அதே பக... மேலும் பார்க்க

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூம்பாறையில் உள்ள கைகாட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்... மேலும் பார்க்க